நறுவீ·தமிழருவிபுறநானூறு
396 / 398
புறநானூறு396

பாடல்சால் வளன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

கீழ் நீரால் மீன் வழங்குந்து; மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து; கழி சுற்றிய விளை கழனி, அரிப் பறையாற் புள் ளோப்புந்து; நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான் மென் பறையாற் புள் இரியுந்து; நனைக் கள்ளின் மனைக் கோசர் தீந் தேறல் நறவு மகிழ்ந்து தீங் குரவைக் கொளைத்தாங் குந்து; உள்ளி லோர்க்கு வலியா குவன், கேளி லோர்க்குக் கேளா குவன் கழுமிய வென்வேல் வேளே; வளநீர் வாட்டாற்று எழினி யாதன் கிணை யேம், பெரும! கொழுந் தடிய சூடு என்கோ? வளநனையின் மட்டு என்கோ? குறு முயலின் நிணம் பெய்தந்த நறுநெய்ய சோறு என்கோ? திறந்து மறந்து கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு என்கோ? அன்னவை பலபல . . . . . . . வருந்திய இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே; மாரி வானத்து மீன் நாப்பண், விரி கதிர வெண் திங்களின், விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை! யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் நிரைசால் நன்கலன் நல்கி, உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மாங்குடி கிழார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்