நறுவீ·தமிழருவிபுறநானூறு
394 / 398
புறநானூறு394

என்றும் செல்லேன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின், ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன், வள்ளிய னாதல் வையகம் புகழினும்! உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப், பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக, அகமலி உவகையடு அணுகல் வேண்டிக், கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர் பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு, இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும், ‘துன்னரும் பரிசில் தரும்’ என, என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்