நறுவீ·தமிழருவிபுறநானூறு
393 / 398
புறநானூறு393

பழங்கண் வாழ்க்கை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற், குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி, அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும் கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின் வள்ளன் மையின்எம் வரைவோர் யார்?’ என; உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா, உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென, மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி, ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக், கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன, வெண்நிண மூரி அருள, நாளுற ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப், போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன, அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும் கேடின்று நல்குமதி, பெரும! மாசில் மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக், ‘கோடை யாயினும் கோடி . . . . காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந! வாய்வாள் வளவன் வாழ்க! எனப் பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
நல்லிறையனார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்