நறுவீ·தமிழருவிபுறநானூறு
392 / 398
புறநானூறு392

அமிழ்தம் அன்ன கரும்பு!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

மதிஏர் வெண்குடை அதியர் கோமான் கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான் பசலை நிலவின் பனிபடு விடியல், பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ, ‘உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து, நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து, அணங்குடை மரபின் இருங்களந் தோறும், வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ! வாழிய பெரிது’ எனச் சென்றுயான் நின்றனெ னாக, அன்றே, ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்ம், எனத் தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ, ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து அரும்பெறல் அமிழ்த மன்ன கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்