நறுவீ·தமிழருவிபுறநானூறு
379 / 398
புறநானூறு379

இலங்கை கிழவோன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை; அவனே பெறுக, என் நாஇசை நுவறல்; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து, அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம்; பெரும! குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்! நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா, வல்லன், எந்தை, பசிதீர்த்தல்’ எனக், கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக், கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது. விண்தோய் தலைய குன்றம் பிற்பட, ‘ . . . . ரவந்தனென், யானே- தாயில் தூவாக் குழவிபோல, ஆங்கு அத் திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புறத்திணை நன்னாகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்