நறுவீ·தமிழருவிபுறநானூறு
378 / 398
புறநானூறு378

எஞ்சா மரபின் வஞ்சி!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

தென் பரதவர் மிடல் சாய, வட வடுகர் வாள் ஓட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக், கடுமா கடை இய விடுபரி வடிம்பின், நற்றார்க் கள்ளின், சோழன் கோயில், புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு, இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல், விரல்செறி மரபின செவித்தொடக் குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு, அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே, இருங்குளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஊன்பொதி பசுங்குடையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்