நறுவீ·தமிழருவிபுறநானூறு
373 / 398
புறநானூறு373

நின்னோர் அன்னோர் இலரே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

உருமிசை முழக்கென முரசும் இசைப்பச், செருநவில் வேழம் கொண்மூ ஆகத், தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக் கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை, இழிதரு குருதியடு ஏந்திய ஒள்வாள் பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப, மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே! . . . . . . தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து, மென்தோள் மகளிர் மன்றம் பேணார், புண்ணுவ. . . . . . . . . . . . . . . . . .அணியப் புரவி வாழ்கெனச், சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர, நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர் அம்பழி பொழுதில் தமர்முகம் காணா, . . . . . . . . . ற்றொக்கான வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு, உரும் எறி மலையின், இருநிலம் சேரச், சென்றோன் மன்ற சொ¦ . . . . . . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப, வஞ்சி முற்றம் வயக்கள னாக, அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் கொண்டனை பெரும! குடபுலத்து அதரி; பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்! விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற, “புகர்முக முகவை பொலிக!” என்றி ஏத்திக், கொண்டனர்’ என்ப பெரியோர் : யானும் அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற, . . . . . லெனாயினுங் காதலின் ஏத்தி நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின், மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும! பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத் தாவின்று உதவும் பண்பின், பேயடு கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து செஞ்செவி எருவை குழீஇ, அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கோவூர்கிழார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்