நறுவீ·தமிழருவிபுறநானூறு
370 / 398
புறநானூறு370

பழுமரம் உள்ளிய பறவை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

. . . . . . . . . . . . . . . வி, நாரும் போழும் செய்துண்டு, ஓராங்குப் பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ, வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து, அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல் உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின் பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை, வரிமரல் திரங்கிய கானம் பிற்படப், பழுமரம் உள்ளிய பறவை போல, ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத், துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப, விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப் படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சி அதரி திரித்த ஆளுகு கடாவின், அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, ‘வெந்திறல் வியன்களம் பொலிக!’ என்று ஏத்தி இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும; வடிநவில் எ·கம் பாய்ந்தெனக், கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார் இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும்; அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஊன்பொதி பசுங்குடையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்