நறுவீ·தமிழருவிபுறநானூறு
367 / 398
புறநானூறு367

வாழச் செய்த நல்வினை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே யாயினும் தம்மொடு செல்லா; வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; வாழச் செய்த நல்வினை அல்லது, ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை; ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்; யான் அறி அளவையோ இவ்வே; வானத்து வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் பரந்து இயங்கும் மாமழை உறையினும், உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்