நறுவீ·தமிழருவிபுறநானூறு
364 / 398
புறநானூறு364

மகிழகம் வம்மோ!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வாடா மாலை பாடினி அணியப், பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க, மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக், காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும், மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே! அரிய வாகலும் உரிய பெரும! நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கூகைக் கோரியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்