நறுவீ·தமிழருவிபுறநானூறு
363 / 398
புறநானூறு363

உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித், தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக் காடுபதி யாகப் போகித், தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே; அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு. வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலாஅ அவிப் புழுக்கல் கைக் கொண்டு, பிறக்கு நோக்காது, இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஐயாதிச் சிறுவெண்டேரையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்