நறுவீ·தமிழருவிபுறநானூறு
353 / 398
புறநானூறு353

'யார் மகள்?' என்போய்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத், தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித், தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, வினவல் ஆனா வெல்போர் அண்ணல்! ‘யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்; குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு . . . . . . . . . . . . . . . . . உழக்குக் குருதி ஓட்டிக், கதுவாய் போகிய நுதிவாய் எ·கமொடு, பஞ்சியும் களையாப் புண்ணர். அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்