ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.
வரலதோறு அகம் மலர . .. .. .. ..
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.
வரி பொருள்
சோழநாட்டுத் தலைவன் பேராரவாரமும் செல்வமும் உடையவன்; அவனை நாடி வருவோர்க்கு மனமகிழ்ந்து ஈவான். அவன் மகள் பாரியின் பறம்புமலையின் குளிர்ந்த சுனைபோலப் பிறர் காண்பதற்கரியவளாய், மாட்சிமையான பெண்மை நலத்துடன் இல்லினுள் பாதுகாக்கப்படுகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது