நறுவீ·தமிழருவிபுறநானூறு
326 / 398
மூதின் முல்லை326

பருத்திப் பெண்டின் சிறு தீ!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச், சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் அருமிளை இருக்கை யதுவே -மனைவியும், வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது, படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்