பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
வரி பொருள்
பொற்கம்பிபோல் முறுக்கமைந்த நரம்பும், மின்னலை ஒத்த தோலும், வண்டின் ஒலிபோன்ற இசையும் உடைய சிறிய யாழை இசைக்கும் திறமையும் இனிமையும் நிறைந்த பாணனே என்று அழைக்கிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது