கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;
வரி பொருள்
வளைந்த குழைகளை அணிந்த மகளிர் மாலை சூட்ட, கடும் பனிக்குளிரை நீக்க நாரால் வடிக்கப்பட்ட கள்ளைப் பருகி, காற்றின் வேகத்தையே மிஞ்சும் விரைவு கொண்ட சிறந்த குதிரையைப் போருக்குத் தயார் செய்ய நீ அவசரமாகிறாய் என்று வீரனை நோக்கிப் பாடுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது