‘வருகதில் வல்லே ; வருகதில் வல்’ என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக் , காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
வரி பொருள்
வேந்தன் அனுப்பிய சிறப்புத் தூது ‘விரைந்து வாருங்கள்’ என்று இடந்தோறும் அறிவிக்க, நூலரி மாலை சூடிய மறக்குடி வீரன் வேறு ஊர்தி நாடாமல் தனியாகக் கால்நடையாகவே விரைந்து போருக்கு வந்தான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது