நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற,
மண்டமர்க் குடைந்தன னாயின், உண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்-
வரி பொருள்
நரம்புகள் மேலெழுந்து வற்றிய மெலிந்த தோள்களையுடைய முதிய தாயிடம், அவள் மகன் படைக்கு அஞ்சி புறங்கொடுத்து இறந்தான் என்று பலர் கூறுகின்றனர். அது உண்மையாயின் அவன் பாலுண்ட என் முலையை அறுத்தெறிவேன் என்று அவள் சினந்து உறுதி கூறுகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது