மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
வரி பொருள்
நரைத்த கூந்தலுடைய முதிய தாய், தன் மகன் போரில் யானையை வீழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அவனைப் பெற்ற நாளைவிடப் பெரிதாகப் பெருமகிழ்ச்சி கொள்கிறாள்; அதே வேளையில் அவளது கண்களில் மழைத்துளிகளைப் போல எண்ணற்ற கண்ணீர் வழிகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது