நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்,
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.
வரி பொருள்
முதிய தாயின் அன்புக்குரிய இளம் வீரன், ஆய்மகள் கூரிய நகத்தால் தெறித்த குடப்பாலின் துளிபோல், எதிர்ப்படைக்கு எங்கும் பரவும் துன்பமாகத் தானே மாறினான் என்று அவனது போராற்றல் கூறப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது