நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,
தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்
எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
வரி பொருள்
நீலக் கச்சையும் பூவேலை ஆடையும் மயிற்பீலி கண்ணியும் அணிந்த வீரன் தன்னை நோக்கி வரும் யானையின்மேல் வேலை எறிகிறான். பகைவர் படை நெருங்கியபோதும் பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும் அவனது தனித்துணிவை பாடல் காட்டுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது