பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!
வரி பொருள்
பயன் தரும் பெருமழை பொய்த்து, நீர்நிலைகளும் வறண்டு போகும் கோடையிலும், நீர்வளம் மிக்க கழனிகளில் ஆம்பல் இலை நிழலில் நத்தைகள் இணையும் செழிப்புடைய நாட்டின் பெருவீரனே என்று மன்னனின் நாட்டுவளத்தைப் புலவர் எடுத்துரைக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது