கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்;
வரி பொருள்
பிணம் புதைக்கப்பட்ட தாழிகளின் அருகே கழுகு, பொகுவல், காக்கை, கூகை போன்ற பறவைகளும் பேய்க்கூட்டமும் அச்சமின்றி இயங்கும் சுடுகாட்டை நோக்கி வெளிமான் சென்றுவிட்டான் எனப் புலவர் அவன் இறப்பைச் சுட்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது