கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்,
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவாகும்
மலை கெழு நாட! மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை, புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்குவரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,
இனையை ஆதலின், நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.
வரி பொருள்
பாரி இறக்கச் சென்றபோது தன்னையும் உடன் வரவிடாமல் ‘ஒழிக’ என்று தடுத்தது தங்கள் ஆழ்ந்த நட்புக்கு ஏற்றதல்ல என்று கபிலர் வருந்துகிறார். இப்பிறப்பில் இருந்த நட்பைப் போல மறுபிறப்பிலும் இடைவிடாது பாரியுடன் வாழ உயர்ந்த ஊழ் அருளட்டும் என வேண்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது