இல்லாகியரோ காலை மாலை,
அல்லாகியர் யான் வாழும் நாளே,
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ,
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?
வரி பொருள்
அதியமான் இல்லாதபின் காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்; தாம் வாழும் நாட்களும் பயனற்றவையாகட்டும் என ஔவையார் இரங்குகிறார். பகைவர் மலைநாடு முழுவதையும் கொடுத்தாலும் ஏற்காத வீரன், நடுகல்லில் சிறுகலத்தில் படைக்கப்படும் தேறலை ஏற்றுக்கொள்வானோ என்று கேட்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது