வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
வரி பொருள்
வாயில் காவலனே என்று இருமுறை அழைக்கும் ஔவையார், வள்ளல்களின் செவியில் தம் சிறந்த சொற்களை விதைத்து நினைத்த பரிசைப் பெறும் உறுதியான உள்ளமுடைய பரிசிலர்களுக்கு வழக்கமாக அடைக்கப்படாத இந்த வாயில் தமக்கு மட்டும் ஏன் அடைக்கப்படுகிறது என்று வினவுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது