அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
வரி பொருள்
தோலை விரித்ததுபோல் பரந்த வெண்களரில் ஒருவனால் துரத்தப்படும் மான் ஓடித் தப்புவதுபோல, தனியாக இருந்தால் துன்பத்திலிருந்து விலகி வேறொரு நெறியில் சென்று உய்ய இயலும் எனக் கவிஞர் எண்ணுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது