ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்,
பெருமா விலங்கைத் தலைவன்,
வரி பொருள்
மாவிலங்கை நாட்டின் இயற்கை வளத்தைப் புலவர் விரிவாகச் சித்தரிக்கிறார்: பெண்கள் சேற்றைக் கிளறும்போது ஆமை முட்டைகளும் ஆம்பல் கிழங்குகளும் கிடைக்கும் நீர்வளம் மிகுந்த நிலம்; அத்தகைய பெருமாவிலங்கையின் தலைவனே நல்லியக்கோடன்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது