நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
வரி பொருள்
போரைக் கண்டால் எதிர்த்து வென்று நிற்பதால் தலைவனின் உடல் வாள் வடுக்களால் நிறைந்தது; அதனால் கண்களுக்கு அழகாகத் தோன்றாவிட்டாலும் அவன் வீரப்புகழ் செவிக்கு இனிமையானது என்று புலவர் பழிப்பது போலப் புகழ்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது