ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப்,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி,
வரி பொருள்
நெடுநாளாகச் சமைக்காததால் உயர்ந்த அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. கடும் பசியால் வாடி, பால் இல்லாமல் வற்றிய முலையைச் சுவைக்கும் போதெல்லாம் அழும் தன் குழந்தையின் முகத்தை மனைவி நோக்குகிறாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது