இரவலர் புரவலை நீயும் அல்லை!
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி;
வரி பொருள்
இரவலரைப் பேணும் வள்ளல் நீ அல்லை; அதனால் உலகில் வள்ளல்கள் இல்லையென்று கருதாதே. இரவலரும் உள்ளனர், அவர்களைப் பேணும் உண்மையான கொடையாளர்களும் உள்ளனர் என்பதை இப்போது காண்பாயாக என்று பெருஞ்சித்திரனார் இளவெளிமானை நேராகச் சாடுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது