தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
வரி பொருள்
தமக்குரியோர் தவறு செய்தால் பொறுத்தல், பிறர் வறுமையைத் தன் நாணமாக எண்ணுதல், போரில் பழி வராத ஆண்மையுடன் நடப்பது, வேந்தர் அவையில் உயர்ந்து விளங்குவது ஆகிய நான்கு பண்புகள் வரிசையாகக் கூறப்படுகின்றன.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது