திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ;
வரி பொருள்
கடலருகே இருந்தாலும் குடிக்கத் தகுந்த சிறிய இனிய நீரையே மக்கள் தேடுவது போல, பெருவேந்தரிடத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளியோரைப் புலவர்கள் தனியே நாடிச் செல்வர் என்று மோசிகீரனார் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது