பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக் கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே:
வரி பொருள்
கண்டீரக் கோவின் குடியில், ஆடவர் தூரத்தில் இருந்தாலும் பெண்களே தமக்குரிய அளவில் இரவலர்க்குப் பரிசு வழங்கும் வண்மை மரபு இருப்பதால், இளங்கண்டீரக் கோவை அன்புடன் தழுவினேன் என்று புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது