கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
வரி பொருள்
கிழிந்த உடையுடன் பலா மரத்தடியில் வழிப்பயண வருத்தத்தால் தளர்ந்து இருந்த புலவரையும் அவரது சுற்றத்தையும் வேட்டுவன் கண்டுணர்கிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது