கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி,
நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து,
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்;
வரி பொருள்
உயர்ந்த மலைநாட்டின் நள்ளி, தளராத முயற்சியால் பெற்ற செல்வத்திலிருந்து நாள்தோறும் நன்கலன்களையும் களிறுகளையும் பரிசிலர்க்கு அளிக்கிறான் என்று வன்பரணர் அவன் வண்மையைப் புகழ்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது