கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்,
கார்வான் இன்னுறை தமியள் கேளா,
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
வரி பொருள்
கன்முழைகளிலிருந்து அருவிகள் விழும் பல மலைகளை அரிதாகக் கடந்து, சிறியாழில் இரங்கற்பண்ணான செவ்வழியை இசைத்தபடி வந்த புலவர், மழைத்துளியின் இனிய ஓசையைக் கேட்டு தனிமையில் வருந்திக் கொண்டிருந்த அழகிய, குளிர்ந்த கண்களையுடைய பேகனின் மனைவியின் துயரநிலையை முன்வைக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது