கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை,
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித்,
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்,
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்,
வரி பொருள்
புலிகள் இயங்கும் உயர்ந்த மலையின் ஏறுதற்கரிய சிறுவழியில் வருந்தி ஏறி வருகிறார் பாணன்; மென்மையான நடையுடைய வளையணிந்த விறலி அவன் பின்னால் வருகின்றாள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது