முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
வரி பொருள்
அனைவரிலும் முன்னே நினைக்க வேண்டிய ஆயை பின்னரே நினைத்தேன்; அதனால் என் உள்ளம் அழியட்டும், பிறரைப் புகழ்ந்த என் நாவு பிளந்துபோகட்டும், பிறர் புகழைக் கேட்ட என் செவி பாழூர்க் கிணற்றைப் போலத் தூரட்டும் என்று புலவர் தம்மையே கடுமையாக நொந்துகொள்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது