முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
வரி பொருள்
பகைவரின் போர்ச் செருக்கை அடக்கி நுனி தேய்ந்த தந்தங்களையுடைய உன் யானைகள் வருவதைப் பார்த்த அரசர்கள், மதில்வாயில்களின் பழைய கதவுகளை மாற்றி வலுவான புதிய கதவுகளும் கணையமரங்களும் அமைக்கிறார்கள்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது