திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார்; வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
வரி பொருள்
வலிமையாகப் பிணிக்கப்பட்ட போர்முரசு முழங்க இனி நீ சென்று வெல்ல வேண்டிய போர் எங்கே உள்ளது? உன்னை எதிர்த்து வந்த பெருமையற்ற பகைவேந்தர்கள் உன் முன்னணிப் படையையே தாங்க முடியாமல் சிதறி ஓடினர் என்று ஔவையார் வெற்றியைச் சுட்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது