மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
வரி பொருள்
முன்னோர் மறைந்த பின் மரபாக வந்த அரசுரிமையைப் பெற்றதையே பெருமை எனக் கருதி, குடிமக்களிடமிருந்து அளவுக்கு மீறி இறை கேட்கும் ஆண்மை குறைந்த சிறியவன் அரசைப் பெற்றால், அந்த ஆட்சி அவனுக்குப் பொறுக்க முடியாத கனமான பாரமாகிவிடும் என்று நலங்கிள்ளி கூறுகிறான்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது