சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
வரி பொருள்
அறத்தின் வழியில் பொருளும் இன்பமும் அமைவதுபோல், மற்ற அரசர்களைக் கடந்த பெருமையுடன் நலங்கிள்ளியின் வெண்கொற்றக் குடை உயர்வதாகவும், அவன் புகழையும் போர்வெற்றியையும் நாடுபவனாகவும் புலவர் சித்தரிக்கிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது