நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி,
முடித் தலை அடுப் பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
வரி பொருள்
கடலில் காற்றால் செலுத்தப்படும் கலம்போல் யானைகள் போர்க்களத்தைத் திறக்க, ஒளிரும் ஆயுதங்களுடன் நிகழ்ந்த கடும் போரின் வெற்றியைப் புலவர் மிகத் தீவிரமான களவேள்வி உருவகங்களால் காட்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது