நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையின்
தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து
வரி பொருள்
நெல் அறுக்கும் உழவர்களும் கடலில் உழைக்கும் பரதவர்களும் தம் உழைப்புக்கிடையே நீரிலும் குரவையிலும் இன்பம் காணும் செழிப்பான வாழ்வுலகம் வரையப்படுகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது