முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத் தாகநின் னாயு டானே
வரி பொருள்
கடலால் சூழப்பட்ட அகன்ற உலகைத் தம் முயற்சியால் ஆண்டுப் புகழை நிலைநிறுத்திய வலிமைமிக்க முன்னோரின் வழித்தோன்றலான அரசன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனப் புலவர் வாழ்த்துகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது